கண்டி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கட்டுகஸ்தொட்ட பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொள்கின்றனர்.