தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவின் அரசியல்துறை பொறுப்பளராக இருந்து மரணித்த தமிழினியின் இறப்பு தமிழனத்தின் பேரிழப்பாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் அரசியல்துறைப்பொறுப்பாளராக இருந்த பொறுதமிழினியின் இழப்பானது அனைத்து தமிழர்களுக்கும் தயர்நிறைந்த இழப்பாகும்.
இவரது தனிப்பங்கு தமிழர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாததொன்று.
வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் இவர் கால்படாத இடமே இல்லை என்று கூறலாம்.
குறிப்பாக 2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு பிரதேசங்களில் இவரது பணி மிகவும் அளப்பரியதாகவே இருந்தது.
தான் தன் இனத்திற்காக போராடவேண்டும் என்ற நோக்கில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். அதன்காரணமாக போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் 2009 இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு பொது வாழ்வில் ஈடுபட்டார்.
இவர் சிறையிலே அடைக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு சென்று பார்வையிட்டபோது அவரது நிலையினை கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன்.
தமிழினத்திற்காக போராடிய தமிழினி தன்னுடைய வாழிவில் இழந்தவை அதிகம்.
எனவே இவரது இழப்பானது தமிழ் இனத்திற்கு மிகவும் ஒரு பேரிழப்பாகும் இவருடைய கனவு நனவாக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.