நாஅரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்

307

ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு அடுத்த சில நாட்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் சமீபத்திய அமர்வின்போது இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
ஜென்காவின்  விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் அவர் இலங்கையின் சமாதானத்தைகட்டியெழுப்புவதற்கான  முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.
மேலும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்வார்.

SHARE