இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்பு பேணிய அவுஸ்திரேலியர் கைது

305

இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குறித்த நபர் மீது அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் எலசபத் சவுத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான அவுஸ்திரேலியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியர் அல்லாதவர்கள், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க இந்த நபர் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முக்கியமான சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் இவர் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்கேத நபரை காவல்துறையினர் தேடி சுற்றி வளைப்பு நடத்தியதாகவும் தொழில் செய்யும் இடத்தில் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபருக்கு எதிராக எலிசபெத் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE