லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் டைடஸ் புத்திபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் ஜகத் பாலப்பட்டபந்தி கடமையாற்றி வந்தார்.
பாலபட்டபந்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதவான் லால் ராஜித் சில்வா மற்றும் சந்திரனாத் நெவில் குருகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அரசியல் சாசன பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்