யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியம்

306

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பரணகம அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழுக்க முழுக்க உள்ளக நீதவான்கள் விசாரணைப் பொறிமுறைமையில் ஈடுபடுத்தப்பட்டால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையேனும் உள்வாங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை அரசாங்கம் பகிரங்மாக ஏற்றுக்கொண்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை ஒன்று நிறுவப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பு வழங்கியோ அல்லது தண்டனை விதித்தோ குற்றச் செயல்கள் ஒப்புக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்

SHARE