எல்பிடிய – ரன்தொடுவ பிரதேசத்தில் இன்று காலை 9.45 மணியளவில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.