கௌரவ சபாநாயகர் அவர்களே!
இச்சபையில் எனது கன்னி உரையையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு தங்களுக்கு எனது நன்றிகள்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்வதற்கு வாக்களித்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிந்தபோது அதன் பொருளாதாரம் எமது நாட்டைவிட பின் தங்கிய நிலையிலேயே இருந்ததாக வரலாறு கூறுகி றது. அங்கு சீன, மலாய், தமிழ் மொழிகள் அரச மொழிகளாக்கப்பட்டன. அவர்களுடைய தொடர்புமொழியாக ஆங்கிலத்தை பாவித்துவந்தார்கள். மறைந்த தலைவர் லீகுவான்யூ அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சகல மக்களுக்குமான சமத்துவக்கொள்கை, அந்த உச்ச நிலையை அடைவதற்கு வழிவகுத்தது. அவர்கள் முழுமையான அர்த்தபுஷ்டியான வரவு செலவுதிட்டங்களை நிறைவேற்றி வெற்றி பெற்றிருக்கின்றார்கள். எமது முன்னைய சிங்களத் தலைவர்கள் சிங்களம் மட்டும் என்ற அரச கருமமொழி சட்டத்தை 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
Sinhala only act formally the official language act No.33 of 1956 was an act passed in Parliament of Ceylon in 1956 the act failed to give official re cognisation to tamils.
எமது இந்த நாட்டில் சிங்கள மொழி பேசுபவர்கள் 70மூ வீதமாகவும், தமிழ் மொழியைப் பேசுபவர்களான இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லீம் மக்கள் மொத்தமாக 29மூ வீதமாகவும் இருந்தபோதும் அன்றைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்க மறுத்தார்கள்.
அன்றைய சிங்களத் தலைவர்களின் தவறுதல்களால் தமிழர்கள், தமிழ் மொழியின் அந்தஸ்து, பூர்வீக கலாச்சார அடையாளங்கள், தமது நில உரிமைகள், கேள்விக்குறியாக்கப்படுவது பற்றி அதி கமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். மொழிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எமது பொருளாதார அபிவிருத்திக்கு கொடுக்க தவறியிருந்தோம்.
The Banda-Chelva pack was an agree ment signed between the Prime Minister of Sri lanka S.W.R.D.Bandaranayake and the Leader of the Main Tamil Political Party in Sri lanka S.J.V.Chelvanayagam on 26th of July 1957. It advacated, creation of a ser vice of Regional Council in Sri lanka as an mean to giving a certain level of autonomy of Tamil people of the country.
பண்டா-செல்வா ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1958ஆம் ஆண்டு கிழித்து எறியப்பட்டது. இதனால் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் மோசமான நிலையை அடைந்தது. இதன் விளைவாக புத்த பிக்கு ஒருவரால் 1959ஆம் ஆண்டு பிரதம மந்திரி பண்டாரநாயக்க சுட்டுக்கொல்லப்பட காரணமாகியது. இதன் மூலம் அமைதிப்பூங்காவாக இருந்த இலங்கையில், ஒரு பயங்கரவாத ஆயுத தாக்குதலைத் தொடங்கிவைத்த பெருமை புத்த பிக்குவையே சாரும்.
1956ஆம் ஆண்டு முதலாவது இனக்கலவரம் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 150இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
1958ஆம் ஆண்டு கலவரமானது தமிழ் பேசும் மக்களை நோக்கி மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் மூலம் 300க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து 1977,1981,1983 என தமிழர் இனப் படுகொலைகள் நடந்தேறியது. இவற்றின் விளைவு தமிழ் இளைஞர்கள் தமக்கான தனித்துவமான வாழ்வை நோக்கி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வைத்தது.
தொடர்ந்த தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள், வட்டுக்கோட்டைத் தீர்மானமாக 1976ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுதந்திர தமிழ் ஈழத் தாயகக் கோரிக்கையாக உருவெடுத்தது.
இதன் பின் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமானது தமிழர்களின் குறைந்தபட்ச விருப்புக்களான காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் கொண்டுவரும் என சர்வதேசம் நம்பியது.
13வது திருத்தத்தில் உள்ள காணி அதிகாரமானது வட மாகாணத்தில் முதலமைச்சரின் கீழ் உள்ளதாக கருதப்படுவதாக இருப்பினும் மகாவலி அதிகார சபை என்ற போர்வையில் ஒரு லீட்டர் மகாவலி நீர்கூடச் செல்லாத வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழுள்ள கொக்குளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டங்கேணி ஆகிய கிராம மக்களின் காணிகள் பறித்தெடுக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் செய்வதற்கு வழிவகுத்துள்ளது.
1984ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மேற்குறிப்பிட்ட கிராமத்திலிருந்து மக்கள் வெளியேறிய பின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் காணிகள் 1987ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மக்களுக்கு பகுதி பகுதியாக வருடாந்த அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கப்பட்டது. இதன் உச்சக் கட்டமாக 2014ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சூட்சுமமிக்க காணி அனுமதிப்பத்திரங்கள் முன்னாள் ஜனாதிபதி அவர்களால் நேரடியாக விஜயம் செய்து வழங்கி வைக்கப் பட்டுள்ளன.
எனவே நான் இந்த பாராளுமன்றத்தை கேட்டுக்கொள்வது யாதெனில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு வர்த்தமானி பிரகடனம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் 13வது திருத்த சட்டத்தின் மூலம் வட மா காண முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட காணி அதிகாரத்திற்கு கௌரவமளித்து முதலமைச்சரின் சிபார்சைப்பெற வேண்டும் என இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்ந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளாக காணி, பொலீஸ் மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பன சீர்குலைக்கப்பட்டு 13வது திருத்தமானது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய பாரிய தமிழ் இன படு கொலைகளின் முடிவிலும் கூட, ஒரு சுதந்திரமான தமிழரின் வாழ்வுக்கான உரித்துக்கள் மறுக்கப்பட்டு வருகின்றது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் இலங்கையில் ஐ.நா சபை செயலாளர் நாயகம் பான்கீமூன் அவர்களுடன் விடுத்த கூட்டறிக்கையின் அடிப்படையிலும், இலங்கை அரசு ஐ.நா சபையில் ஏனைய சர்வதேச நாடுக ளுடன் சேர்ந்து கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையின் அடிப்படையிலும், பின்வரும் விடயங்களை உடனடியாக நிறைவேற்றி உதவுமாறு இச்சபையை கேட்டுக்கொள்கின்றேன்.
01.அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குக
முன்னை ஜே.வி.பி போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புப்போல் தற்போது சிறைகளில் வாழும் 300க்கும் அதிகமான தீர்ப்பு வழங்கப்பட்ட, குற்றம் சாட்டப்பட்ட, வழக்குகள் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடரப்படாத அனைத்து தமிழ் அரசி யல் கைதிகளையும் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
02. நில ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்
வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களின், அரச திணைக்களங்களின், பொது சபைகளுக்கு உரித்தான காணிகள் உடன் விடுவிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு அர சின் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மேற்படி விடயம் சம்பந்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராமத்தில் அபகரிக்கப்பட்ட 17 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தால் முற்று முழுதாக அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு கிராமத்தையும் விடுவித்து பொது மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
03.மீள்குடியேற்றம்
அர்த்தபுஷ்டியான தமிழர் மீள்வாழ்வு ஏற்படுத்தப்பட உடன் ஐநா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை இலங்கையில் செயற்பட அனுமதியளித்து மக்கள் மீண்டும் தங்களது சொந்த கால்களில் மீண்டெழும் வரையான நிவாரண, நிதி, வள, தொழில், உள நல உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்.
04. இராணுவக்குறைப்பு
இலங்கையின் மொத்த இராணுவத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இராணுவத்தினர் தமிழர் வாழும் பிரதேசங்களான வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு தொடங்குகின்றபோதும் அளவுக்கதிகமான இராணுவத்தினர் மீளப்பெறப்படவில்லை. இது தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக வும் மோசமாகப் பாதித்துள்ளது. தேவைக்கதிகமான இராணுவம் படிப்படியாக மீளப்பெறப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.
05. இன அடையாளங்களை குறித்து நிற்கும் திருத்தலங்;கள் பாதுகாக்கப்படவேண்டும்.
மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் இந்து மக்களின் ஒரு புனித பிரதேசமாகும். அங்கு பலாத்காரமாக எடுக்கப்பட்ட காணி களில் ஒரு பௌத்த விகாரை அமைக்க முற்படுவது மத முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகிறது. இந்த நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும்.
மேலும் கொக்குளாய் பிரதேசத்தில் அதிகபடியாக கிறிஸ்தவ சிங்கள மக்களும் இந்து முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகின்ற போதிலும் ஒரு பத்து பௌத்த குடும்பங்களுக்காக பாரிய அளவில் ஒரு பௌத்த விகா ரையை பொது மக்களின் காணிகளை யும், வைத்தியசாலைக் காணியையும் அபகரித்து அமைக்க முற்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மேலும் இவ்விடயத்தை நீதிமன்ற தடையையும் மீறி கட்டட வேலைகள் இராணுவத்தின் துணையுடன் நடை பெறுவது என்பது நீதிதுறையை கேள்விக் குறியாக்கியுள்ளது.
06. பொறுப்புக்கூறல் ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
இலங்கையில் இறுதிப்போரில் போர் மரபுகள் பின்பற்றப்படவில்லையென ஐ.நா அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே பழைய காயங்களுக்கும் வலி இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். உண்மையான நோக்குடன் பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்திற்கு நம்பகமான செயல்முறை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாடு நீண்டகால இனமுரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இறுதி தீர்வை நோக்கி பயணிக்க முயற்சி எடுக்கவேண்டும் என கோரி நிற்கின்றேன்.