முன்னாள் கடற்படைத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்:

305

முன்னளர் கடற்படைத் தளபதி அட்மிரால் சோமதிலக்க திஸாநாயக்க இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு ஆணைக்குழு சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதிகளான அடமிரால் ஜயந்த பெரேரா எதிர்வரும் 6ம்திகதியும், அட்மிரால் ஜயனாத் கொலம்பகே எதிர்வரும் 9ம் திகதியும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து கொள்ள கடற்படைத் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE