சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடருவேன்: நீதியமைச்சர்

290
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

பொன்சேகா நேற்று கூறிய தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

அவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ச லஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.

பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

SHARE