தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்கியுள்ளனர் – லொஹான் ரத்வத்தே

301

ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது போயுள்ளதாக  கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறான ஒருவரினால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் கட்சித் தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் நிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாகவும் யுத்த வெற்றி நிச்சயமற்றத்தன்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படக் கூடாது எனவும் அதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE