வன்னி தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக மீண்டும் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பாருக்கு அப்பதவி கிடைக்குமென காத்திருந்த நிலையினில் அமைச்சரான றிசாத் பதியூதீன் நியமிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
வன்னியினில் நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பினில் கடும் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் றிசாத் பதியூதீன் மீது தமிழ் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வந்திருந்த நிலையினில் மீண்டும் அவர் வன்னி தேர்தல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டமை தமிழ் தரப்புக்களது முகங்களினில் கரிபூச வைத்துள்ளது.
இதனிடையே மன்னார் அபிவிருத்தி கூட்டம் வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ் பளிஹக்கார தலைமையில் 23 நவம்பர் 2015 அன்று இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் தற்போது முன்னொடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.