16 வயதுக்குட்பட்ட போட்டி: சதம் விளாசிய அர்ஜூன் டெண்டுல்கர்

286
16 வயதுக்குட்பட்ட போட்டி: சதம் விளாசிய அர்ஜூன் டெண்டுல்கர்
மும்பையில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேயாட் கிண்ணம் துடுப்பாட்டத்தில் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சதம் விளாசியுள்ளார்.மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் கவாஸ்கர் லெவலுக்காக விளையாடிய அர்ஜூன், ரோகித் சர்மா லெவலுக்கு எதிராக 106 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அணியின் முதன்மை பயிற்சியாளர் விகாஸ், அர்ஜூன் எந்தவித அழுத்தமும் இன்றி நேர்த்தியாக விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர்கள் போதிய ஓட்டங்கள் எடுக்க தவறவே அணியை தூக்கி நிறுத்தும் பணியை சாமர்த்தியமாக செய்துள்ளதாக தெரிவித்த விகாஸ், ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் அர்ஜூன் நிதானத்துடன் ஆடி 106 ஓட்டங்கள் சேர்த்து அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

இடதுகை மட்டைப்பந்தாளரான அர்ஜூன் இடது கை வேகப் பந்து வீரராகவும் உள்ளார் என்பது கூறிப்பிடத்தக்கது.

SHARE