வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல்

318

suma

வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

நேற்று முன்தினமான திங்கட்கிழமை குறித்த செயற்பாட்டாளர்களுள் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த நால்வர் கொண்ட கும்பலொன்றே அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வடமராட்சி கரவெட்டிப்பகுதியிலுள்ள பாடசாலை நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக கூட்டமைப்பின் சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார்.எனினும் இதற்கெதிராக ஊர் மக்கள் கிளர்ந்தெழுந்ததுடன் பழைய மாணவர் சங்கம் உள்ளிட்டவை போர்க்கொடி தூக்கியிருந்தன.பாடசாலை நிகழ்வை புறக்கணிக்க முடிவெடுத்ததுடன் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு செல்லாது தவிர்க்கவும் முற்பட்டிருந்தனர்.அத்துடன் சுமந்திரனிற்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.

இவ்வெதிர்ப்புக்களினையடுத்து சுமந்திரன் இறுதி நேரத்தினில் பின்வாங்கியதுடன் நிகழ்;விலும் பங்கெடுத்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய அட்டகாசத்தை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்படுத்தினார் என மகள் குற்றம் சாட்டுகின்றனர்.

SHARE