தன் பண்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் டி.ராஜேந்தர். இவர் மற்ற இயக்குனர்கள் படத்தில் பாடியுள்ளாரே தவிர, நடித்ததே இல்லை.
இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா படத்தின் போதே இவரிடம் ஒரு கதை கூறினாராம். தற்போது அந்த படம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தின் ஹீரோ டி.ஆர் தானாம்.
மேலும், இதுக்குறித்து டி.ஆர் தரப்பு தெரிவிக்கையில் ‘பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் தகவல்களை நாங்களே அறிவிப்போம்’ என கூறியுள்ளாரகள்.