கோப்பாய் வடக்கைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லுாரியின் 18 வயது மாணவன் செந்துாரன் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த செந்துாரனுக்கு நான்கு சகோதரங்கள் உள்ளனர். இவர்களில் மூத்த பெண்பிள்ளைகள் தற்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இம் மாணவன் அமைதியான சுபாவம் கொண்டவன் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவன் எழுதி வைத்ததாகத் தெரிவிக்கப்படும் கடிதத்தில் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. கலைப்பிரிவில் கற்கும் மாணவன் எழுத்துப் பிழைகள் விட சந்தர்ப்பங்கள் இல்லை. அத்துடன் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுத வேண்டிய அவசியமும் இல்லை.
ஆங்கில வார்த்தைகளை எழுதிய போது அந்த வார்த்தைகள் இன்னொரு தாளில் எழுதியதைப் பார்த்து எழுதியதாகவே தோன்றுகின்றது. மற்றைய வார்த்தைகள் தொடர்ச்சியாக எழுதிய பின்னர் இந்த ஆங்கில சொற்கள் பார்த்து எழுதப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிகின்றது.
அத்துடன் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் எந்த ஒரு மாணவனும் தான் faclரty of art என்று எழுதுவதில்லை. பல்கலைக்கழகத்தில் கற்பவர்களே இவ்வாறு எழுதுவார்கள்.
அத்துடன் அரசியல் கைதிகளுக்காக நான் உயிரைத் தியாகம் செய்கின்றேன் என்றோ அல்லது தற்கொலை செய்கின்றேன் என்றோ எந்த ஒரு வார்த்தையும் அதில் காணப்படவில்லை. ஆகவே இவனது மரணம் மிகவும் சந்தேகப்படும்படியாக அமைந்துள்ளது.
சிறையில் வாடும் எமது உறவுகளை விடுவிப்பதற்கா எந்தவித அகிம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டாவது அவர்களை வெளியே கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும்.
இதே வேளை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அரசியல்கைதிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதி மொழியை அடுத்து (இவ்வாறு ஏற்கனவே அவர்கள் பல உறுதி மொழி கொடுத்துள்ளார்கள்) தமது உண்ணாவிரத்தைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்களே தமது உயிரின் பெறுமதியை அறிந்து கொண்டுள்ளார்கள்.
ஆனால் இளவயதில் இந்த மாணவன் தனது சுயமான போக்கில் இவ்வாறு முடிவெடுத்திருந்தால் அவனது முடிவு முழு முட்டாள் தனமானதாகும். இவ்வாறு முட்டாள் தனமாக தன்னிச்சைப் போக்கில் உயிரை மாய்ப்பது கேடு கெட்ட செயல்.
இந்த மாணவனை அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தற்கொலை செய்வதற்கு யாராவது துாண்டி தற்கொலை செய்ய முற்பட்டிருந்தால் அவர்கள் துாக்கில் தொங்கப்பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். குறித்த மாணவனை மூளைச் சலவை செய்தவர்கள் நிச்சயம் தமிழ்த்தேசியபற்றுள்ளவர்களாக இருக்க முடியாது.
அவர்கள் ஒரு தந்தைக்குப் பிறக்காதவர்களாக இருக்கலாம். ஏனெனில் அடுத்தவனை சாகவிட்டு தமக்கு அரசியல் லாபம் தேட முற்படுபவர்கள் நிச்சயம் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சில வேளைகளில் இது படைப் புலனாய்வாளர்களின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம். இவனது மரணத்தை வைத்து அதில் குழப்பத்தை ஏற்படுத்தி வித்தியாவின் கொலைக்குப் பின்னரான நடவடிக்கை போல ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் வடக்கில் படையினரை நிறுத்துச் செய்யும் தந்திரோபாயத்திற்காக குறித்த மாணவனை சில புல்லுருவிகள் மூளைச்சலவை செய்து கொலை செய்திருக்க வாய்ப்பும் உள்ளது.
இதே வேளை யாழ் பல்கலைக்கழகத்திற்குள்ளும் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிநடத்தப்படும் மாணவர்கள் பலர் இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆகவே குறித்த மாணவனின் மரணத்தையிட்டு உணர்ச்சிவசப்படாது இவனது மரணத்தை பற்றி ஆழமான விசாரணைகளை நடாத்தி இவனது மரணத்திற்கு வழி வகுத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும்.
தற்போது எம் முன்னால் நிற்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதை எமது சமூகம் நுாறுக்கு நுாறுவீதம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கான சரியான தலைமைத்துவம் வரும்வரை நாம் யாரையும் பலி கொடுக்காது யாருடைய பொய் தேசியக் குமுறல்களையும் காதில் எடுக்காது இருப்பது மிக மிக அவசியமாகும்.
வடக்கின் கல்விச் சமூகும் என இச் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளத.
செந்துாரனுடன் கூடுச் சென்ற நண்பனைக் கானவில்லை வெகு விரைவில் முழுமை விபரம்