
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட கல்வி அபிவிருத்தி வலயமாக மாற்றப்பட்டு கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இலங்கையில் அனுமதி பெற்ற இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்ற சுமார் 3000 பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் இரண்டு பாடசாலைகள் வீதம் அருகிலுள்ள சிறந்த பாடசாலை என்ற திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பாடசாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.