நாடாளுமன்ற அனுமதியின்றி ஐ.நா. ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை கடற்படை முகாமுக்குள் அனுமதித்தது தவறு என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உருப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராமையில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நேற்று மாலை சென்றிருந்தார்.
அங்கு வைத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
பொதுவாக இலங்கையில் மட்டுமன்றி எந்தவொரு நாட்டிலும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ராணுவ முகாம்களில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை.
அவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு திருகோணமலை கடற்படை முகாமுக்குள் நுழைய அனுமதித்தது தவறானது. அவர்கள் அங்கு விசாரணைகளை மேற்கொள்ள இடமளித்தது அதனைவிடவும் கடுமையான குற்றமாகும்.
இவ்வாறான ஒரு விடயத்தை மேற்கொள்வதாயின் குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திலாவது அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.