வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார்.
thinappuyal newsமுல்லைத்தீவில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்
Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015
தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காய் தம்முயிரை ஈந்த மறவர்களை நினைவு கூரும் நாள் இன்று. காலத்தால் அழியாத அந்தக்காவிய நாயகர்களை பூசித்து எம் நியாயமான உணர்வுகளை உலகின் முன் வெளிப்படுத்துவோம் என்று ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ரவிகரன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாள் மாவீரர் நாள்.
தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காக தமது வாழ்வின் சுகங்களை தியாகம் செய்து இந்த மண்ணில் விதையானவர்களே மாவீரர்கள்..அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள்..
இந்நாளில் காலத்தால் சாகாத அந்த காவிய நாயகர்களை பூசித்து எம் நியாயமான உணர்வுகளை உலகின் முன் எங்கள் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது மனித நாகரீகம் ஆகும். அந்த உலக பொது நாகரீகத்தையே எங்கள் மக்கள் இன்று நிலை நிறுத்துகிறார்கள்.
இனியும் நிலை நிறுத்துவார்கள். என்று தெரிவித்தார்.