யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
thinappuyalnewsயாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம்-வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்
Posted by Thinappuyalnews on 27 நவம்பர் 2015
சரியாக மாலை 6.05 மணியளவில் பிரதான ஈகைச்சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், பரஞ்சோதி மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் விளக்கேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.