முன்னைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கட்டுமான திட்டங்களிற்காக 400 பில்லியனை செலுத்தவேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகை உட்பட பல இடங்களில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன,பெந்தோட்டவில் இரண்டு கட்டிடங்களை கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தனர் நான் அவற்றை இரத்துச்செய்தேன், பலதிட்டங்களை அவற்றிற்கான ஓரு ரூபாயை கூட ஓதுக்காமல் ஆரம்பித்துள்ளனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.