தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

306

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

vasudeva

சோசலிஷ முன்னனி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்வதே இடதுசாரிக் கட்சிகளிடையே காணப்படும் பொதுகவான கருத்து என அவர் கூறியுனார்.

எனினும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிக அவதானமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத கருத்தை கைவிட்டமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய ஐக்கியத்திற்கு அத்திவாரம் இடத் தயார் நிலையில் இருக்கின்றனரா என்ற சந்தேகம் காணப்படுவதாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

SHARE