கிழக்குப் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

319

 

கிழக்குப் பல்கலைகழக உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிங்கள மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிங்கள மாணவர் ஒருவரை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று மதியம் முதல் சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள மாணவர் ஒருவர் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டதாக கூறி அவரை பல்கலைகழக நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைகழக உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE