கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

341

 

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என். அப்துல்லா முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்தியபோது அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டாhர். நீதிமன்றை விட்டு வெளியில் வந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் நான் குற்றவாளி அல்லர் என்று மட்டக்களப்பு கிறிஸ்தவ மக்களிடம் தெரிவிக்குமாறு ஊடகங்களுக்கு கூறினார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபராக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதேவேளை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிறிஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா என அழைக்கப்படும் கனகநாயகம் ஆகியோரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE