குளிர் காலத்துக்கு ஏற்ற பாதுகாப்பு குறிப்புக்கள்!

357
வெயிலை சமாளிக்கப் பற்பல வழிகள் உள்ளன. ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல.குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. குளிர்கால அழகுப் பராமரிப்புக்கு வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிமையான சிகிச்சைகள் உள்ளன.

குளிர் காலத்துலதான் நமது உடம்பின் சூடு அதிகமாகும். குளிர் சீசனில் ஆரஞ்சு, சீத்தாப்பழம் எல்லாம் நிறைய கிடைக்க இதுதான் காரணம். தண்ணீர்ச் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்களில் நிறைய எடுக்க வேண்டும்.

இந்த சீசனில் தாகமே எடுக்காது. தண்ணீரே குடிக்க மாட்டோம். ஆனால், அது ரொம்பத் தப்பு. தாகம் எடுக்காவிட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்கணும்.குளிரோடு தாக்கத்தில் முடி உதிரும், பொடுகு அதிகமாகும். கண் மற்றும் பாத எரிச்சல் வரும். மலச்சிக்கல் இருக்கும். வியர்வையே இல்லாததால, சருமத் துவாரங்கள் சுருங்கி, பொலிவிழக்கும்.

வெயில் நாட்களைவிட குளிர் நாட்களில் சருமம் அதிகம் கறுத்துப் போகும் என்றால் நம்ப முடியுதா? வாட்டர் பேஸ்டு சன் பிளாக்ல 1 துளி லெமன் கிராஸ் ஆயிலும், 1 துளி லேவண்டர் ஆயிலும் கலந்து தடவினா, சருமத்துக்கு கூடுதலா 1 மணி நேரப் பாதுகாப்பு கிடைக்கும்.

பொடுகே இல்லாதவங்களுக்குக் கூட இந்த நாளில் அதிக பொடுகு வரும். 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், 1 டீஸ்பூன் கடுகு எண்ணெயையும் கலந்து, அதுல 1 துளி ரோஸ்மெர்ரி ஆயில், 1 துளி டீ ட்ரீ ஆயில், 1 துளி லேவண்டர் ஆயில் கலந்து தலைக்கு மசாஜ் பண்ணி, 2 மணி நேரம் கழிச்சு, மைல்டான ஷாம்பு உபயோகிச்சு அலசலாம்.

போதுமான ஆக்சிஜன் இல்லாமல், தலை முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். 1 டீஸ்பூன் அவகேடோ ஆயிலும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, அதில் 1 துளி ரோஸ் மெர்ரி ஆயில், 2 துளி சிடார்உட் ஆயில், 1 துளி ரோஸ் ஆயில், 1 துளி பே ஆயில் கலந்து மசாஜ் செய்யணும். வெந்நீர்ல நனைச்சுப் பிழிஞ்ச டவலால தலைக்கு ஒத்தடம் மாதிரி கொடுத்து, 1 மணி நேரம் கழிச்சு, அலசினா, முடி பட்டுபோல மாறும். முடி உதிர்வு உடனே நிற்கும்.

2 டீஸ்பூன் வெண்ணெயில், 1 டீஸ்பூன் தயிர் கலந்து, அதுல 2 துளி ஜெரேனியம் ஆயில், 2 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில், 1 டீஸ்பூன் கிளிசரின் கலந்து, பிளவு பட்ட முடியோட நுனிகள்ல தடவி, 2 மணி நேரம் கழிச்சு அலசினால், மிருதுவாகும்.

பனிக்காலத்தில் உதடுகள் வறண்டு வெடிக்கும். அடிக்கடி எச்சிலால் ஈரப்படுத்திட்டே இருப்போம். அது உதடுகளை இன்னும் வறண்டு போக வச்சு, கருப்பாக்கும். எப்போதும் கையில் பெட்ரோலியம் ஜெல்லியோ, லிப் பாமோ வைத்திருப்பது நல்லது.
பீட்ரூட் சாறுல, 1 டீஸ்பூன் தேன், 10 துளி லெமன் ஆயில், 10 துளி யிலாங் யிலாங் ஆயில், 5 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல தொட்டு உதடுகளில் தடவினால், கருமையும் மறையும். வறட்சியும் நீங்கும்.

பார்லியைப் பொடிச்சு, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்தத் தண்ணீரை மட்டும் எடுத்துக்கணும். அதில் 3 துளி லோட்டஸ் ஆயில், 3 துளி ஜாதிபத்ரி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல முக்கி, கண்களுக்கு மேல வச்சிருந்தா, கரு வளையங்கள் மாயமாகும். கண்கள் பளபளப்பாகும். களைப்பும் நீங்கும்.

கல்கண்டை பொடியாக்கவும். கொஞ்சம் சமையல் எண்ணெய் எடுத்து, அதில் கல்கண்டு பொடி, 1 துளி பெர்கமாட் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில் கலந்து, கைகள் மேல மென்மையா தேய்ச்சு, மசாஜ் பண்ணி, 10 நிமிஷம் கழிச்சுக் கழுவினா, குழந்தையோட சருமம் மாதிரி உங்க கைகள் மிருதுவா மாறியிருக்கும்.

லிக்விட் பாரஃபின்ல 5 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி நெரோலி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, கால்களைக் கழுவிய பிறகு பாதங்கள், கால்களோட மேல் பகுதில தடவி, 5 நிமிஷம் கழிச்சு, சாக்ஸ் போட்டுட்டுத் தூங்கணும். கால்கள்ல உள்ள வெடிப்பு, சுருக்கமெல்லாம் நீங்கி, கால்கள் மிருதுவா மாறிடும்.

SHARE