மாணவியின் உயிரிழப்பை பொருட்படுத்தாது விழா எடுத்த யாழ். அதிபர்

314

Unbenannt11

யாழ்ப்பாணம் – வரணி மத்திய கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயின்ற மாணவி சிவாஜி விந்துஜா நோய் வாய்ப்பட்ட நிலையில் கடந்த இரண்டாம் திகதி உயிரிழந்திருந்தார்.

மாணவியின் பூதவுடல் வரணி வடக்கில் அமைந்துள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இவ்வாறான துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்த அன்றைய தினம், குறித்த மாணவி கல்வி பயின்ற வரணி மத்திய கல்லூரியில் வலய மட்ட ஆங்கில தின நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றுள்ளன.

தனது பாடசாலையில் பயின்ற மாணவி உயிரிழந்துள்ளதையும் பொருட்படுத்தாது, பேண்ட் வாத்தியங்கள் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மிக விமர்சையான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றதாக பாடசாலை பழைய மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், குறித்த மாணவி பாடசாலை பேண்ட் வாத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தனது நண்பியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க முடியாத ஓர் அவல நிலைமை அந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் செய்திப் பிரிவு பாடசாலை அதிபரை தொடர்புக் கொண்டபோது,

இந்த ஆங்கில தின போட்டிகள் கல்வி வலயத்தின் அனுசரணையுடனேயே நடைபெற்றதாகவும், அதனால் தனக்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை எனவும் அவர் எமது செய்திப் பிரிவிற்கு கூறினார்.

 

 

 

SHARE