சந்திரிக்காவிற்கு 100 மில்லியன் ரூபா பணம் வழங்க முயற்சி..

280

timthumb

அவன்ட் கார்ட் நிறுவனம் தமக்கு பணம் வழங்க முயற்சித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்திற்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தம்மை அணுகியதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரையும் இணங்கச் செய்து விட்டதாகவும், தாம் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அவன்ட் கார்ட் நிறுவனத்திற்காக நியாயம் பேசப் போவதில்லை எனவும் பணம் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான சர்ச்சை எழுந்தவுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ சில அமைச்சர்களை அணுகியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை நடத்தி வரும் துணைக் காவல்துறை அத்தியட்சகருக்கு 100 மில்லியன் ரூபா பணம் வழங்குவதாக கூறியிருந்தார் எனவும், காவல்துறை உத்தியோகத்தர் அதனை நிராகரித்துள்ளார் எனவும், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தேசிய வீரராக மதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனம் பல பில்லியன் ரூபாவினை சம்பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் சட்ட மா அதிபரும் சட்டவிரோதமான முறையில் இந்த நிறுவனத்தைக் கொண்டு பாரியளவில் பணம் சம்பாதித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE