கித்துல்கல – தெளிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கலவானையிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் யட்டியந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.