லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு

301

 

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மஹிந்த தரப்பு சம்பளம் வழங்கத் தீர்மானித்துள்ளது.

maxresdefault

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு, மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் வழங்கப்படவுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற சம்பளத்தை இதற்காக ஒதுக்கியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளவும் அவர்களது குடும்பப் பராமரிப்பிற்காகவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட உள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான சம்பளத்தை கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த தரப்பினைச் சேர்ந்த பிவித்துரு ஹெல உறுமய கட்சியும் இராணுவ அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத்தீர்மானித்துள்ளனர்.

SHARE