கிராம பொது அமைப்புக்களுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மல்லாவி கல்விளான், வவுனியா கோமரசங்குளம், செட்டிக்குளம், வாரிக்குட்டியூர் ஆகிய இடங்களுக்கு இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.