சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

297

சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26.12.2015 அன்று காலை 9.25மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவு இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் திரு.நீதன் தலைமையில் இடம்பெற்றது. உயிர்நீத்தவர்களுக்கான பிரதான பொதுச்சுடரினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து உறவுகளுக்கான ஈகைச்சுடரினை உறவினர்கள், பொதுமக்கள், பாடசாலை அதிபர்கள், மதகுருமார்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து நினைவாலயம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. அடிக் கல்லினை வைத்திய கலாநிதி.சி.சிவமோகன், இளைப்பாறிய பங்குதந்தை, புலம்பெயர்வாழ் தமிழரான னு.கணேசராசா ஆகியோர் நாட்டி வைத்தனர். உயிர்நீத்தவர்களுக்கான மதவழிபாடுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

2 4 1 5 6 7 8 9 3 10 11

SHARE