இனப்பிரச்சினை தீர்வுக்கு- தமிழ் மக்கள் அவைக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்

355

தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வு இன்றைய தினம் யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்த நிலையில் வடகிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான 14 பேர் கொண்ட நிபுணர்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

TPC-1024x685

மேற்படி அவையின் 2ம் அமர்வின் நிறைவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அவையின் இணை தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பி.லக்ஸ்மன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அரசியல் கட்சிகளிடமே விட்டுவிட முடியாது.

இதற்காகவே இந்த தமிழ் மக்கள் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வகையில் தமிழ் மக்களுடைய இன ப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை அடிமட்டத்திலிருந்து மக்களுடைய பங்களிப்புடன் உருவாக்கிக் கொள்வதற்கான நிபுணர்குழு இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளிடமிருந்து 2 பேர் வீதம் உள்வாங்க ப்பட்டிருப்பதுடன், முதலமைச்சர் சார்பிலும் 2பேர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

மிகுதி பேர் சிவில் சமுகம் சார்பில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய முழுமையான பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் இந்த நிபுணர்குழு அடிமட்டத்திலிருந்து மக்களுடைய கருத்துக்களை பெற்று மக்களுடைய விருப்புக்கள், எண்ணங்களின் அடிப்படையில் தீர்வு திட்ட முன்வரைபை ஒரு மாதகாலத்திற்குள் மக்கள் அவைக்கு முன்வைக்கும்.

பின்னர் 3 அல்லது 4 மாதங் களில் இறுதி தீர்வு திட்டம் நிறைவுக்கு வரும் என நம்புகிறோம்.

மேலும் தீர்வு திட்டத் தை தயாரிப்பதற்கான நிபுணர் குழுவுக்கு ஆலோசணைகளை வழங்குவதற்கு வெளிநாடு களில் உள்ள அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேர்ச்சி பெற்ற 5 ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படுவதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமும் முதலமைச்சர் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் ஊடாக ஆலோசனைகள் பெறப்படும் என்றார்.

தமிழ் மக்கள் அவைக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்

தமிழ் மக்கள் அவை ஒரு மக்கள் அமைப்பு மட்டுமே அதற்கு அரசியல் சா யம் பூசாதீர்கள். நாம் ஒரு மக்கள் அமைப்பாக தமிழ் மக்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் தீர்வு திட்டம் ஒன்றை உருவாக்கவே நினைக்கிறோம்.

மேற்கண்டவாறு மக்கள் அவை இணை தலைவர்களான சீ.வி.விக்னேஸ்வரன், பி.லக்ஸ்மன், ரி.வதந்திரஜா ஆகியோர் ஒருங்காக சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இன்றைய தினம் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான, மக்கள் அமைப்பாகவே இந்த தமிழ் மக்கள் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மற்றபடி தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமோ, தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமோ எங்களிடம் எப்போதும் இருக்கவில்லை.

அது எங்களுடைய குறிக்கோளும் அல்ல. இந்நிலையில் மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது மக்கள் அவை மட்டுமே அரசியல் கட்சி அல்ல. அரசியல் கட்சியாக இயங்க வேண்டிய தேவையும் எமக்கு இருக்காது.

எனவே முளையிலேயே அழிக்கும் செயற்பாட்டை ஊடகங்களும், பொறுப்பானவர்களும் மேற்கொள்ள வேண்டாம். எம்மீது அரசியல் சாயம்பூசாதீர்கள் என அவர்கள் மேலும் கேட் டுக் கொண்டுள்ளனர்

 

 

SHARE