மூன்று கடைகள் உடைத்து வவுனியாவில் துணிகர திருட்டு

321

வவுனியா, குருமன்காடு, கரப்பங்காடு பகுதியில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு துணிகரத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரப்பங்காட்டிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம், பலசரக்கு வியாபார நிலையம், தொலைபேசி விற்பனை நிலையம் ஆகிய மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று காலை குறித்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அதன் உரிமையாளர்கள் வந்து பார்த்த போதே கடை உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து வவுனியா பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE