போலிக் கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு நாட்டை சீரழிக்க இடமில்லை – ஜனாதிபதி

265
போலிக் கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு அதற்கு உயர் பெறுமதிகளைக் கொடுத்து தாய் நாட்டின் சிரேஷ்டத்துவத்தையும் அபிமானத்தையும் சீரழிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை  என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக பேணப்பட்டு வந்த கலாச்சாரப் பண்புகள் மற்றும் எமக்கே உரித்தான பண்புகள்  ஆகியவற்றை  பாதுகாத்து முன்னேற்றமடைந்த நாடொன்றை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடனே ஜனவரி 8 ஆம் திகதி நாட்டைப் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளிநாட்டுப் பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீரழிவுகள் குறித்து கருத்து வெளியிட்ட பின்னர் சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னை சீரழிக்க சிலர் முற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தமக்கே உரிய பண்புகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை பினபற்றுவது என்பது சட்டத்தை விட கலாச்சாரத்திற்கு அதிக பலம் கிடைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எமது தன்மைகளையும் கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாத்து திறமைகள் மற்றும் கலைப் பண்பாடுகள் ஊடாக சர்வதேசத்தை வெல்வதற்கும் சிறந்த நாடாக  விளங்குவதற்கும்  அனைத்து தரப்பினரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

SHARE