உலக கால்பந்து விருதை தட்டிச்சென்ற மெஸ்சி

303
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கிளப் அணியின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்சி உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார்.ஏழாவது உலக கால்பந்து விருது துபாயில் நடைபெற்றது. இந்த விருதைப் பெறுவதற்காக மெஸ்சி அர்ஜெண்டினாவில் இருந்து துபாய் வந்திருந்தார்.

விருதை வென்ற மெஸ்சி கூறுகையில் ‘‘இந்த விருதை பெறுவது மிகவும் சிறப்பானது.

ஆனால், இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர்கள் எனது அணி வீரர்கள். இது எனக்கு மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பார்சிலோனா அணி சிறந்த அணிக்கான விருதை தட்டிச் சென்றது.

பார்சிலோனா அணி இந்த வருடத்தில் ஸ்பெயின் லீக், கோபா டெல் ரெய், சாம்பியன் லீக், ஐரோப்பா சூப்பர் கிண்ணம் மற்றும் உலக கிளப் ஆகிய ஐந்து கிண்ணங்களை கைப்பற்றியது.

SHARE