தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதான இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் குறித்து முன்னதாக நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவரும் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது. கைதான இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இவர்களை ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.