கஜேந்திரகுமார், சுரேஸ் புதிய கூட்டணியா????

320



தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டராங்களில் தகவல் கசிந்துள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஓரம் கட்டப்பட்டு வருவதை நிதர்சனத்தில் அவதானிக்க முடிகின்றது.

image_handle

குறிப்பாக தேர்தலின் பின் கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு முடிவுகளும் அங்கத்துவ கட்சி என்ற வகையில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருக்கு அறிவிப்பதில்லை, அண்மையில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திப்பில்கூட தனக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரனே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் தனது எதிர்கால அரசியல் இருப்பைத்தக்கவைத்துக்கொள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போது முதலே கடும் பிரேயோத்தனம் மேற்கொண்டு வருகின்றார்.

இன்னொரு பக்கத்தில் தேர்தலில் நாம் எவ்வாறு தோற்றோம்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமல் அந்த அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் கஜேந்திரகுமார் அணியினரும் தமது எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளை இம்முறை இப்பொழுதிருந்தே ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் முகவரி தேடுபவர்கள் தற்போது எடுத்திருக்கும் ஆயுதம் சர்வதேச விசாரணை எனவே இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை இவர்கள் ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ள கையெழுத்து வேட்டையில் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் பிரசன்னம் சற்று அதிகமாக இருப்பதை அவானிக்கு முடிந்தது.

குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையில் புதிதாக ஒரு நெருக்கத்தையும் அவதானிக்க முடிந்தது. தேர்தலுக்கு முன்னரே இவ்விருவரும் இரகசிய தொடர்பாடலை பேணி வந்தனர் என அப்போதே பலர் தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய நெருக்கம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் இவ்விருவரும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளக்கூடும் என அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இம் முறை தேர்தலுக்கு சைக்கிள் இற்கு ஆதரவு தெரிவித்து புலம் பெயர் தேசங்களில் செயற்பட்ட முன்னாள் புலிகளுகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் என்பதுவும் இங்கு கவனிக்கதக்கது. புலம் பெயர் தேசத்து புலிகளின் வேண்டுதலின் படி இவ்விருவரும் நெருங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

அப்போ சிவசக்தி ஆனந்தனின் நிலை . தனி வழிதான்… அது பதவியின் வழி… தமிழரசு கட்சியின் வழி.
(அவதானிப்பு)

SHARE