மலர்ந்துள்ள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) பொலனறுவைக்கு விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
இதற்காக பொலன்னறுவை ஹிங்குராங்கொடை அருகே அமைந்துள்ள புலதிசி புத்தி மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களைச் சந்திக்கும் ஜனாதிபதி, பொலனறுவையில் நடைபெறும் முக்கிய மதவழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் வழிபாடுகளிலும கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், அங்குள்ள சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேரில் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளவுள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதி பொலனறுவையில் செலவிடும் புத்தாண்டு காலத்தில் ஜனாதிபதியின், குடும்பத்தினரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவுள்ளனர்.