தென் ஆப்பிரிக்க அணி சந்தித்த தொடல் தோல்விகளால் அணித்தலைவர் ஆம்லாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தொடர் தோல்விகள்
டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, 2015ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த வெற்றியும் பலமிழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானது.
மழை பாதிப்பால் வங்க தேசத்துக்கு எதிரான 2 போட்டியையும், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியையும் டிரா செய்திருந்தது. 3 டெஸ்டில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. கடைசியாக இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தது.
இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி யை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கருத்துகள் எழுந்த நிலையில், தனது சொந்த மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணியை ஆட்டம் காண வைத்துள்ளது.
அதிரடி மாற்றங்கள்
டுமினி அதிரடியாக நீக்கப்பட்டு குயின்டான் டி காக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த போட்டியில் விளையாடிய ஸ்டெயின், அபாட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக ரபாடா, மோரிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அறிவுரை வழங்கும் ஸ்மித்
தற்போது இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள்.
குறிப்பாக அம்லா, டு பிளிசிஸ் மற்றும் வான் சைல் ஆகியோர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் இருந்து அவர்களை மீட்டெடுக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், முன்னாள் அணித்தலைவரும், தொடக்க வீரருமான கிரேம் ஸ்மித்தை துடுப்பார்ட்ட ஆலோசகராக நியமித்துள்ளது. அவரும் 2-வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
|