தமிழக மீனவர்கள் 6 பேருக்கு ஜனவரி 22 வரை விளக்கமறியல் நீடிப்பு

334
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் ஜனவரி 22 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு கைதுசெய்யபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 6 தமிழக மீனவர்களையும் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய போதே குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 26 ந் தேதி ஆறு தமிழக மீனவர்களையும் மன்னார் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்கள் ஆறு பேரையும் நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த ஆறு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிவான் குறித்த மீனவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் ஜனவரி 22ந் தேதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

SRI_LANKA_(F)_0622_-_Enciclica

SHARE