பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஊக்கமருத்து விவகாரத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.கடந்த மாதம் 13ம் திகதி அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது செய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் யாசிர் ஷா ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து யாசிர் ஷா உடனடியாக கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் யாசிர் ஷா ஊக்கமருத்து விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் சகாரியார்கான் கூறுகையில், ”யாசிர் ஷாவின் மனைவி ரத்த கொதிப்புக்கு மாத்திரைகளை பயன்படுத்தி வருகிறார். அந்த மாத்திரைகளை யாசிர் ஷா தெரியாமல் சாப்பிட்டு விட்டார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது அவருக்கு தெரியாது. அதை அவர் உள்நோக்கத்துடன் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். ‘பி’ மாதிரி சோதனையில் அவர் ஊக்க மருந்து எதுவும் உபயோகப்படுத்தவில்லை என்ற முடிவு வந்தால், அவர் மீதான இடைநீக்கம் உடனடியாக விலக்கி கொள்ளப்படும். ஆனால் மருத்துவர்கள் ’பி’ மாதிரி சோதனைக்கு எதிராக உள்ளதாக தெரிவித்த சகாரியார்கான், அவர் தெரியாமல் மருந்தை பயன்படுத்தியதை மனுவாக தாக்கல் செய்விருப்பதாகவும், இதனால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். |