மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 7 பிரிவுகளை சேர்ந்த 600 மாணவர்கள் இவ்வார்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டுள்ளனர். என்று ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவ பீட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துப பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் அதே வேளை வைத்திய துறையில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையினை நலிவடையச் செய்யும்.
இது மட்டுமல்லாமல் இதுவரை காலமும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்திய சாலைகளில் பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதே போன்று தனியார் துறைகளில் பயிலுபவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் துறைக்குள் உள்ளீர்க்கப்படுபவர்கள் பொதுப் பரீட்சை இல்லாமல் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் வெறுமனே 2 சி எஸ் சித்தி பெற்றவர்கள் கூட தனியார் துறைக்குள் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் 3 பி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.
இனிவரும் காலங்களில் பணம் உள்ளவர்கள் இலகுவாக கல்வியினை தொடர்ந்து செல்லாம் என்ற நிலை உருவாக்கப்படப் போகின்றது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியானது அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் அதே வேளை, வைத்திய சேவையில் மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பும் இல்லாமல் ஆக்கப்படவுள்ளது.
இதனால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பெரும்பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மாபெரும் போராட்டத்தினை இன்று நடத்தியிருக்கின்றோம் இதன்படி காலை 8 மணிக்கு மருத்துவ பீடத்தில் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்து பலாலி வீதியூடாக யாழ்.போதனா வைத்தியசாலை நோக்கி நோக்கி ஆர்ப்பாட்ட நடை பவணியில் இன்று காலை ஈடுபட்டனர்.