சுவீடன் நாட்டு பெண்மணி கடலில் மூழ்கி பலி

325
தங்கல்ல-மாரகொல்ல கடற்பரப்பிற்கு நீராட சென்ற பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் சுவீடன் நாட்டைச்  சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரே  பலியாகியுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பே இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர் தங்கல்ல பிரதேச விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE