தமிழக மீனவர்கள் ஒரு தொகுதியினர் விடுதலை! இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு

303
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஒரு தொகுதியினரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு, தமிழக தேசிய மீனவர்கள் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பகளில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

இதனால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக, தமிழக தேசிய மீனவர்கள் மன்றத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE