கார் வாங்க கண்டி சென்றவருக்கு கிடைத்த அதிர்ச்சி…… 

303

கார் ஒன்றைக் கொள்­வ­னவு செய்யும் நோக்கில் கல்­முனைப் பிர­தே­சத்­தி­லி­ருந்து 30 இலட்சம் ரூபா பணத்­துடன் வருகை தந்த இரு­வரை தாக்கி அவர்­க­ளி­ட­மி­ருந்த பணத்தை கொள்­ளை­யிட்டு தப்பிச் செல்ல முயன்ற மூவரில் இருவர் பொது­மக்­க­ளி­டத்தில் வச­மாக சிக்கிக் கொண்டனர்.

மற்­றை­யவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இவர்­க­ளி­ட­மி­ருந்து பணமும் மீட்­கப்­பட்­டுள்­ளது.

சனிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற மேற்­படி சம்­ப­வத்தில் சிக்­கிய இரு­வ­ரையும் நேற்று திங்­கட்­கி­ழமை கம்­பளை மாவட்ட நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­திய போது சந்­தேக நபர்­களை பெப்­ர­வரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

சம்­ப­வ தின­மான கடந்த சனிக்­கி­ழமை கல்­மு­னையைச் சேர்ந்த வர்த்­தகர் ஒருவர் அவ­ரது மைத்­து­ன­ருடன் காரொன்றைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக கண்­டிக்கு வருகை தந்­துள்ளார்.

இதன்­போது கண்­டியில் இருந்து வெளியே­றிய இவர்­களை பின் தொடர்ந்த மேற்­படி சந்­தேக நபர்கள் மூவர் கம்­பளை வத்­தே­ஹேண பிர­தே­சத்தில் வைத்து வர்த்­தகர் சென்ற காரை மோதி நிறுத்தி இரு­வ­ரையும் கடு­மை­யாக தாக்­கி­விட்டு 30 இலட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­ய­டித்து தப்பிச் செல்ல முற்­பட்­டுள்­ளனர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் முச்­சக்­கர வண்டி சார­திகள் சிலரும் பொது மக்­களும் கொள்­ளை­யர்கள் தப்பிச் செல்ல முயன்ற காரை மறைத்து சுற்­றி­வ­ளைத்து பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் இரு­வரை கைது செய்­த­போதும் மூன்றாமவர் தப்பியோடியுள்ளார்.

மன்னார் மற்றும் உலப்பனை பிரதே சங்களைச் சேர்ந்த இருவரே கைது செய் யப்பட்டுள்ளனர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.dath_kandy

SHARE