யுத்தக் குற்ற விசாரணையில் வெளிநாட்டு தலையீடு நிராகரிக்கப்படவில்லை – ரணில்

282

ஸ்ரீலங்காவின் யுத்தக் குற்றவிசாரணைகளில் வெளிநாட்டின் தலையீட்டை இதுவரை நிராகரிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் பொறுப்புக்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா செயற்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டின் தலையீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

SHARE