மன்னார் பிரஜைகள் குழு,காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து குறித்த கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதிக்குச் சென்றனர்.
இதன் போது கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர் இனியும் வேண்டாம் இந்த துயரம், காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளின் உண்மை நிலை குறித்து அரசே எமக்கு பதில் சொல்க போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பின் மன்னார் பஸார் பகுதியில் தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில் கூடி நின்று தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
குறித்த கண்டன ஊர்வலத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் இருட்தந்தை இ.செபமாலை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ஜான்சன் பிகிராடோ, மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ரி.மேகன் ராஜ் உற்பட காணமல் போனவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.