விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் கண்காணிப்பு பொறிமுறை அவசியம்! கோத்தபாய கோரிக்கை

253
கடும்போக்கு விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் விடுதலையான பின்னர் அவர்களை கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் உதவியுடன் இந்த பொறிமுறையை ஏற்படுத்தாமல் சிறையில் உள்ள விடுதலைப்புலிகளை விடுவித்தால் நாட்டின் அமைதி சீர்குலையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், இறுதிப்போருக்கு முன்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து 5000 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் விசாரணைகளுக்கு பின்னர் 273 பேர் தடுத்து வைக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கொழும்பை தாக்க திட்டமிட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்தால், அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கோத்தபாய எதிர்வு கூறியுள்ளார்.

SHARE