அம்பன்பொல, தேக்கவத்தைப் பிரதேசத்தில் நேற்று பகல் 1 மணியளவில் ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த ரயிலிலேயே ,23 வயதான சுரங்க ஜயதிலக என்ற இளைஞர் மோதி பலியாகியுள்ளதாகவும்.பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.