பொலிஸாரை மிரட்டியமை குறித்து ஊடகவியலாளரிடம் விசாரணை

293
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து சந்தேகநபர்கள், பொலிஸார் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அச்செய்தியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட்டார்.

மாணவி கொலை வழக்கு மன்றில் நடைபெற்ற பின்னர் வெளியில் வந்த சந்தேகநபர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்யப் போவதாக மிரட்டியதாக, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தி தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே, குறித்த ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, சுமார் 3 மணித்தியாலங்கள் வரையில் இன்று விசாரணை இடம்பெற்றுள்ளது.

maxresdefault

SHARE